மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 253
பிள்ளை கனி அமுது

பிள்ளை கனி இல்லை என்று
புலம்பி ஆச்சி
உள்ள கோயில் குளம் எல்லாம்
செய்தா நேர்த்தி
எல்லையிலே றோட்டோர அரசை சுற்றி
இடுப்பு நோக 108
குட நீர் ஊத்தி
எத்தனையோ பிள்ளை
பிறந்து சாக
என்னையும் என் தம்பியையும்
காத்தேன் என்பாள்.

பிள்ளை இல்லா குறை பெரிது
விசேடம் என்றால்
பெரிதாக மதிகார் சொந்த காரர் கூட
தள்ளி வைப்பார் சபையில்
சகுன பிழை என்பார்கள்
தனக்குத்தான் பின் சொத்து என்று ஆள் ஆள்
சொந்தம் எல்லாம் அடிபடுங்கள்
என்ற குறை இருந்தாலும் பிள்ளை ஒன்றை
எடுத்தேனும் வளர்க்கோணும்
இல்லை என்றால்
பின்னடியில் நோய் துன்பம் சாவு வந்தால்
பிணம் நாறி புழு சிந்தும் நிலை உண்டாகும் என்பது என் ஆச்சி சொன்ன வேத வாக்கு
எத்தனை பேர் படும்பாடு
தெரியும் தானே.
சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading