” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 254
விருப்பு தலைப்பு

எழுதாத கவிதை ஒன்று
எதற்காக எழுந்தது இன்று
ஏதேதோ ராகம் கொண்டு
இசைக்கின்ற கீதம் கண்டு

துடிக்கின்ற இதயம் இரண்டு
வடிக்கின்ற சோகம் சீண்டும்
முடிக்கின்ற வாழ்வில் என்றும்
சிரிக்கின்ற காலம் கெஞ்சும்

புதிதான ஞானம் இல்லை
புரிதலே அவ் வறிவின் எல்லை
அழகாக மலரும் முல்லை
அதற்காக வண்டின் தொல்லை

பேசாத வார்த்தை எல்லாம்
எழுத்தாகக வடியும் வெள்ளம்
எதற்காக வாடிடும் உள்ளம்
அன்பங்கு தேடிடும் பள்ளம்

நேற்றோடு மறைந்தது எண்ணம்
காற்றாக மறைந்தது உருவம்
நீறாகத் தகித்திடும் உணர்வு
வேறாகப் பிரிந்திடும் இதயம்

சொல்லி வருவது இல்லை
சொல்லியும் புருவது இல்லை
சொல்லாமல் தெரிவது இல்லை
சொற்களில் மறைவதும் இல்லை

புரிந்திடும் உள்ளம் ஒன்று
புகுந்திடும் அதனுள் எண்ணம்
வித்திடும் நினைவுகள் எல்லாம்
விலகிடும் கனவுகள் கேளாய்

 
சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan