” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
பகலவன்…
உலகப் பரிதியின் உறவாளன்
உயிர்ப்பின் தகமை உணர்வாளன்
இருளை நீங்கும் ஒளியாளன்
இல்லையேல் உலகே உறைந்துவிடும்

வளத்தின் வரமாய் வலம்புரியாய்
நிலத்தின் செழிப்பில் நிறைமதியாய்
மனித வாழ்வின் உயர்நிதியாய்
உலகே வணங்கும் பகலோனே

இயற்கைக் காப்பின் இதயம் நீ
நன்றி போற்றும் வெய்யோனே
காலச்சக்கர கதிரோனே
நானில வளத்து ஞாயிறே
பாரையே இயக்கும் பகலோனே
உதயத்து சூரியன் உதிக்கா விடில்
உலகே இருளின் உறைவீடு.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan