” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மாறுமோ மோகம்

மனதில் ஒலித்திடும் தீய ஓசை
குணத்தை அழித்திடும் அதீத ஆசை
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
பேயாக ஆட்டம்போட்டு கண்டிடுமே வளர்ச்சி

பற்று என்பது விருப்பத்தின் வெளிப்பாடு
சற்று அதிகமானால் அதுவே குறைபாடு
சிலப்பதிகாரத்தில் கோவலனும் வேட்கையின் வேகத்தால்
பலரின் வாழ்க்கை சரிந்ததுவும் மோகத்தால்

பற்பல மோகங்கள் மனிதர்களைக் கவரும்
பற்றை தாண்டிப்போய் வெறியாகிவிடார் சிலரும்
எத்தனை மோகங்கள் என்னென்ன வடிவில்
அத்தனையும் ஆட்டிவிட்டே வெளியேறும் முடிவில்

பெண்மீது கொண்டோர்கள் முடிந்திட்ட கதையும்
மண்மீது கொண்டோர் மண்ணுக்குள் புதையும்
வரலாற்று நிகழ்வுகள் ஆயிரம் உண்டு
உருண்டன பேரசுகள் பேராசைகளால் அன்று

ஆடவர் தேகத்தினவுக்காக இரையாகும் பெண்மை
ஊடகங்களில் அன்றாட செய்தியாகின்றது உண்மை
மோகநிலையற்ற சமுதாயம் உருவாகுவது எப்போது
சோகமேயின்றி நடைபோடாதோ வாழ்க்கை அப்போது

ஜெயம்
23-03-2024

Nada Mohan
Author: Nada Mohan