” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதோ முதுமை

வலியதோ முதுமை

வழியது கிடைக்க வரமாகும் வாழ்வு
வலியது போக்கி வளம்காணும் மாண்பு
பழியது பேசா பௌவியம் கொண்டு
தளிரது போல தழைத்திட வேண்டும்

நறுமலர் பூவாய் நமதிளம் வாழ்வு
முதுமையின் கோலம் முனைப்பாகும் ஒருநாள்
கடுகதி வாழ்வு கரைந்திட நாளும்
கணமொரு காரியம் கைகூடும் வேளை

வலியது முதுமை அல்ல
வளம் காணுமே நல்வாழ்வு
பிறந்தவர் இறப்பர் நியதியின் இயல்பு
பிறப்பிலும் வாழ்வு புதுமையின் பொக்கிசம்

;வலியல்ல முதுமை வசந்ததின் வார்ப்பு
நதிபோல ஓட நமக்கொரு பருவம்
நாளைய வலியும் நமக்காக பிறக்கும்
நனியொரு வரமாய் வலிமை பெற்றிடுவோம்

நகுலா சிவநாதன் 1755

Nada Mohan
Author: Nada Mohan