” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதுவோ முதுமை !

வலியதுவோ முதுமை ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024

வாழ்க்கைப் பயணமதில்
இளமைக்காலம் இதமாக
இளமைத் துடிப்போடு கடந்துவிட
அனுபவங்களின் முதிர்வில்
ஆட்டம் இழந்த நிலையில்
வெந்துபோன நெருப்பின் தணலாக
நொந்து போகுதே இதயங்கள் முதுமையில்
வலியதுவே முதுமை !

குழந்தைகளைப் பெற்றவலி சுமந்தவலி
குடும்பத்திற்காய் உழைத்த வலியென
இளமைக் காலத்தை அசைபோட
இடுப்புவலி கால்வலி கைவலியென
நோயினைச் சுமந்த வலியாக முதுமைக் காலமதில்
தனிமையும் வாட்ட தொடருமே வலிகளும் !

உடலில் உணர்வில் உறவில் மாற்றம்
உடலும் தளர உளமும் சோர
கடந்து போகுது காலமும்
முதுமையை நோக்கி
முதுமை வரமா? இல்லை
முன்னோர் இட்ட சாபமா?
இளமையின் ஆட்டத்திற்கு
முதுமை ஓர் பாடமே !

Nada Mohan
Author: Nada Mohan