நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.04.24
ஆக்கம் -311
பூக்களின் பூ வசந்தம்

பாக்களின் இதமான சந்தம் போல
பூக்களின் பூ வசந்தம் பதமாகவே
விதம் விதமாகவே மிதம் சிந்துமே

தேக்கி வைத்த இதளின் வாசம்
ஆக்கிய நறுமணம் தேசமெங்கும்
மணம் வீசும் பூவின் சுகந்தமே

பல் இனங்களில் பதமிட்டு புல்,
பூண்டு முதல் கல்லிடையே
விரிந்த அழகு மொட்டுக்கள்

சூரியக் கதிர் பட்டுத் தெறித்த
சந்தோஷத்தில் அற்புதமாய்ப்
புத்துயிர் பெற்று பூத்துச்
சிரித்ததே

பல நிறங்களில் சிறகடித்து
விழிகளிற்கு நல் விருந்தாய்
பரவசமூட்டப் பறந்திட்ட

வண்ணப்பூச்சிகள் பூ நிறமாய்
ஒளித்திருந்து மின்னி மின்னி
மனம் குளிர நிறைத்ததே .

Nada Mohan
Author: Nada Mohan

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading