Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.04.2024
இலக்கம்-263
“அழகு”
——————
எனக்கு நானே அழகு
நாலு பக்கமும் கடல் சூழ்ந்த என் ஊர் அழகு
கல் வேலிகள் அமைத்து அரண் அழகு
சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் தீவுகளில் அதிகமானோர் பார்த்து மெச்சுவது பேரழகு
என் வீட்டு முற்றத்து பூப் பந்தல் அழகு
எங்களது கூட்டு குடும்ப வாழ்க்கை அழகு
என் வீட்டு பெண் பிள்ளைகளின் கண்ணிற்கு மை அழகு
என் வீட்டு ஆண்கள் கல்வி உயரழகு
நாம் காலில் போட்ட கால் சங்கிலி அழகு
வர்ண் வர்ண சேலைகள் வாங்கி உடுத்தி அழகு பார்த்ததில் அழகு
கவிதை கட்டுரை எழுதி எழுதி படிப்பதில் ரசித்த அழகு
மகத்தான பாராட்டுக்கள் பெறுவதில் பேரழகு
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading