மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…

வியாழன் கவி -1975

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே❤️…!!

அகரமின்றி அழகேது நம்
தாய்மொழிக்கு
அன்னையின்றி வாழ்வேது
மனிதர் நமக்கு
தாயின்றித் தான் உயிரேதும்
தங்குமா பூமியில்
தளராத நம்பிக்கஒ ஒளியே
தாய் அன்றோ…!

கருவறை குடிகொள்ளும்
தாய்மை இடத்தே
உருவாக்கும் இறைவடிவே
உனைப் பணிவோம்
உயிரோட்ட அன்பு எங்கே
அறிவாயா- மனிதா
உணர்வோடு மதிப்பாக்கு
அன்னை மடியை…!

சுற்றி வந்து சுமையின்றி
சுகம் தரும் தாய்
சுமையென்று நீ விலக்க
நியாயமுண்டோ?
முதுமைக்குள் மூழ்கும்
அவள் காலம் அறிந்து
முத்தாய் நீ சுமக்கவும்
வேண்டாமோ சொல்..!

எத்தனை உறவுகள்
உன்னோடு கடந்தாலும்
உனக்குள் உணர்வாகும்
அன்னையெனும் பாசம்
வேசங்கள் இடாது என்றும்
வேதனை தராது நிற்கும்
வெண் சங்கு தோற்கும்
அன்னை அவளுக்கு
ஈடு இணை ஏது இவ்வுலகிலே..!
சிவதர்சனி இராகவன்
8/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading