” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே “

வியாழன் கவி :
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ”

கருணை எனும்
பொருள் நிறைந்த
அட்சய பாத்திரம்
அகராதியில் எதுவும் இல்லை
அன்னைக்கு நிகர்
கருவாகி கால் பதியும் வரை
சுமை ஏற ஏற
சுகம் என்று சொல்கின்ற குரல்
அன்னைக்கு நிகர் உண்டு அதில்

ஆயிரம் தடை எதிர்
கொண்ட போதும்
அம்மாவின் கை ஒன்று போதும்
துயர் களையும் நிதம்
நம் ஆளுமைக்கு அவர்
எந்நாளும் முதல்
ஆண்டாண்டு காலங்கள்
புரண்டோடி போனாலும்
நம்மோடு நடமாடும் நகல்
அன்னைக்கு நிகர் அவனியிலே எதுவும் இல்லை

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan