தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…….

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே..கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.05.2024

உயிர்தந்த தாயும்
உலகைக் காட்டிய தந்தையும்
என் வாழ்வின் பொக்கிசங்கள்
நிஜ உலகின் தெய்வங்கள்
நித்திலத்தின் முத்துக்கள்
பெரு வரமாய் கிடைத்த மகுடங்கள்
நிகரென்று சொல்வதற்கு
எதுவுமில்லை அவனியிலே !

தன்னம்பிக்கையின் பெரு விருட்சமாக
தன்னலமற்ற தியாகியாக
அர்ப்பணிப்பின் தேவதையாக
படைப்பின் சக்தியாக அவளே அரசாட்சி
இமயமாய் நாம் உயர – தன்னை
உபயம் செய்தவள் அன்னையே
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லையே !

தொப்பூழ்க் கொடியில் நேசத்தைக் காட்டி
மழலைப் பருவமதில் மடியினில் சுமந்து
பள்ளிக் காலமதில் பற்பல கருமங்களாற்றி
பருவ வயதினில் பெருமிதம் கொண்டு
கடைசி வரைக்கும் நெஞ்சினில் சுமந்த
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லை
அவனியில் அன்னை ஓர் அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading