நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…….

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே..கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.05.2024

உயிர்தந்த தாயும்
உலகைக் காட்டிய தந்தையும்
என் வாழ்வின் பொக்கிசங்கள்
நிஜ உலகின் தெய்வங்கள்
நித்திலத்தின் முத்துக்கள்
பெரு வரமாய் கிடைத்த மகுடங்கள்
நிகரென்று சொல்வதற்கு
எதுவுமில்லை அவனியிலே !

தன்னம்பிக்கையின் பெரு விருட்சமாக
தன்னலமற்ற தியாகியாக
அர்ப்பணிப்பின் தேவதையாக
படைப்பின் சக்தியாக அவளே அரசாட்சி
இமயமாய் நாம் உயர – தன்னை
உபயம் செய்தவள் அன்னையே
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லையே !

தொப்பூழ்க் கொடியில் நேசத்தைக் காட்டி
மழலைப் பருவமதில் மடியினில் சுமந்து
பள்ளிக் காலமதில் பற்பல கருமங்களாற்றி
பருவ வயதினில் பெருமிதம் கொண்டு
கடைசி வரைக்கும் நெஞ்சினில் சுமந்த
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லை
அவனியில் அன்னை ஓர் அதிசயமே !

Nada Mohan
Author: Nada Mohan