சர்வேஸ்வரி சிவரூபன்

நிர்மூலம்
@@@@@@

சுதந்திரம் அந்தரம் நிரந்தரமானது நிர்மூலம்
தந்திரமும் தளைத்தது தவிடு பொடியும் ஆனதே
மந்திரம் தெரியாமல் மெளனத்தில் நின்றதே

காத்திரம் இல்லாமல் காசினியில் ஒற்றுமை நிர்மூலம்
பாத்திரம் தூக்கியும் பலனில்லை வெற்றிடம் அதுவும் நிர்மூலம்

எண்ணங்கள் இசைந்தாடின இணையாத பந்தங்கள் வாழ்வு நிர்மூலம்

ஏழைகள் பந்தாடப் பட்டனர் அவர்களுக்கு ஆதரவும் நிர்மூலம்

எத்தனை வகையிலே எத்தனை நிர்மூலங்கள்
வகைவகையாய் பிரித்தால் மனிதனுடைய வாழ்வும்
ஓர் நாள் நிர்மூலம் தானே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan