நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நன்றும் தீதும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
“நன்றும் தீதும் ”

சிந்தனை தெளிவின் பாதையிலே
சிறப்புறு நலங்கள்
நாம் பெறவே
நன்றே செயல்கள்
நாம் செய்வோம்
கலப்பிலா அறுவடை
நாம் பெறுவோம்

நானிலம் செழிக்கும்
வான் பொலிவு
நன்றே அமைந்த
வான் வெளியை
மாசுகள் கொண்ட காற்றாக்கி
நாமே நன்றும் தீதும்
எழுதுகிறோம்

வரவும் செலவும் பார்க்கும் நாம்
வாழ்க்கையில் விதைத்தவை எதுவென்று சீர் படும்
சிந்தையை நாம் கொண்டால் தீயவை அணுகா பாதையிலே
நன்மைகள் கோடி
நாம் பெறுவோம்
நன்றென வாழ்வினை
நாம் சமைப்போம்!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan