பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 267
28/05/2024 செவ்வாய்
வேள்வி
————
உயிரை எடுப்பதும் வேள்வி!
உணர்வை அழிப்பதும் வேள்வி!
பயிரைக் கெடுப்பதும் வேள்வி!
பாரினில் எங்கில்லை வேள்வி!

இயற்கை செய்திடும் அனர்த்தம்,
இதனால் வரும்மன அழுத்தம்!
செயற்கையில் வந்திடும் அழிவு,
சேர்ந்திடில் பெரும் மனப் பிழிவு!

உயர்ந்து வந்திட்ட பேரலைகள்!
ஊரினுள் சென்ற சில நொடிகள்!
கவர்ந் திழுபட்ட இன்னுயிர்கள்!
காலம் மறந்திடாப் பெரு வலிகள்!

அறுபதில் இருந்து கண்ட பேறு!
அங்கே ஓடுது நம்குருதி ஆறு!
வெறுமின அரசியல் பூசுது சேறு!
வேள்வி தானங்கு நடக்குது பாரு!

உலகெங்கும் நடக்குது வேள்வி!
உள்ளத்தில் ஏனென்று கேள்வி!
கலகங்கள், தாங்காது இப்பூமி!
காலங்கள் சொல்லுமா நற்சேதி!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading