பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெண்

ஆணுக்கு துணையாய் மட்டுமே அன்று
ஆணுக்கு இணையாய் அகிலத்தில் இன்று
என்னென்று எப்படி சொல்வது பெண்மையை
பொன்னென்றும் பூவென்றும் சொல்வதா உண்மையை

பண்படாத மனிதர்களால் பட்டாலும் வேதனை
மண்ணிலும் விண்ணிலும் செய்தாளே சாதனை
பாவையென்றால் பொம்யாகப்பார்த்தவரும் முன் நாளிலே
நாவையடக்கி பெட்டிப்பாம்பானார்கள் பின் நாளிலே

பெற்று பேணி வளர்த்தவர் எவர்கள்
கற்றுத் தந்து மகிழ்ந்தவர் இவர்கள்
பெருமைப்படுத்திவிட உலகில் ஒரு பிறவி
உருவாக்கி ஊட்டிவிடும் அகிலத்தின் இறைவி

அழகுடன் அழகு சேர்ந்துவிடும் தன்மை
பழகிவிடும் பண்பதில் மலரினும் மென்மை
மங்கையின் அன்பினாலே மானுடமே தழைத்திடும்
சிங்கப்பெண்ணாய் சாதிப்பவை சரித்திரமாய் நிலைத்திடும்

ஜெயம்
01-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading