நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

******பாமுகமே வாழி*****

மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்//
விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு//
பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்//
நிழலாய் தொடர நிலைத்து.

பைந்தமிழ் பாமுகப் பார்மகள் தீபமாய்//
வையகம் வாழ்த்திட வான்குன்றில் நின்றொளிர //
மையலும் கொண்டே மயங்கிய மாந்தரும்//
கைகூப்பி நின்றாரே காண்.

நாவலர் பேணிய நற்றமிழை நாளுமே//
தேவரீர் பாமுகம் தேசத்தே காத்திட//
ஆவலால் ஆக்கம் அனுதினம் ஆற்றவே//
பாவலர் போற்றிடப் பாங்கு.

Nada Mohan
Author: Nada Mohan