” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனமென்னும் மேடையிலே

நேவிஸ் பிலிப் கவி இல ( 139) 27/06/24

மரக் கிளையில் வந்தமரும் பறவையென
சிறகடித்துப் பறக்கும் எண்ணப் பறவை
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
வானில் வெட்டி மறைகின்ற
மின்னல் சிதறல்களாய்

வேடிக்கைப் பேச்சுக்கள்
வாடிக்கையாகிட
கோடி இன்பம் கண்டு
வரவின்றி செலவு செய்து

உழைப்பில்லா ஊதியம்
உல்லாச வாழ்க்கை
ஏக்கங்கள் கொண்டதில்லை
தாக்கங்கள் கண்டதில்லை

தினம் தினம் ருசித்த வாழ்க்கை
ஆயிரம் மாற்றங்களால்
தொலைத்தலும் தேடலுமாய்
கழிந்திடும் பொழுதுகள்

வாழ்க்கைப் படகினிலே
காலம் நகர்ந்திட
நினைவுகள் மட்டும்
மனதோடு பேசுது.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan