வசந்தா ஜெகதீசன்

உயிர்சேதம்...

உயிர்நேயம்……
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர் வாழ எண்ணல்
உயிர்நேயப் பண்பாகும் உலகில்

ஆதவனின் ஒளி போல பரந்து
ஆளுமே உயிர்நேயம் விரிந்து
வாழ்வின் ஆதரமின்றி வாடுவோர் கோடி
வழிகாட்டி ஆதரிக்கும் உயிர்நேயம் நாடி

வாழ்வோமே நாமும்
வழித்துணையாக மாறி
வாடுகின்ற பயிருக்கு
வார்க்கும் முகில் போல ஆகி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading