திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

விடுமுறை
தவணைக்கு ஒருமுறை
பாடசாலை தந்தது விடுமுறை.
எந்தப் பொறுப்பும் இல்லாத காலம்.
விளையாட்டுக்களுடன் விடுதலை கழியும்
கோயில் திருவிழா
இணுவில் தியேட்டரில்
இடை இடை பக்திப்படம்
மாமா கருணையில்
யாழ் திரை அரங்கில்
அடுத்த ஊரில் சித்தப்பா வீட்டில்
இப்படியாக லீவு கழிந்த
படித்த காலம்.
வேலை என்று
சேர்ந்த போது
ஞாயிறு விடுமுறை
வாரம் ஒருமுறை
வரமாய் விடுமுறை
திருமணம் புரிந்து
பிள்ளைகள் பிறந்து
பிள்ளைகள் கடமைகள் ஒவ்வொன்றாய் செய்து
நித்திரை கொள்ளவும்
வடுமுறை இல்லா
நித்தம் வேலை.
வயோதிபம் வந்தும் விடுமுறை இல்லை
பேரர் பார்ப்பு
பிள்ளைகள் ஒவ் வொன்றின்
பிரசவம் பார்ப்பு
வாழ்வு சுழற்சியில்
வராது விடுதலை
-சிவரஞ்சினி கலைச்செல்வன –

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading