இயற்கைவரமே இதுவும்கொடையே

VajeethaMohamed அ௫ள்பெற்ற ஆனந்தம் அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம் திரிவுகொள்ளும் ௨ம்செயல் திவ்வியம் அள்ளும் அமல் விந்தையோடு விளையாடும் அரம் வியப்போடு பார்கவைக்கும்...

Continue reading

திருமதி செ.தெய்வேதிரமூர்த்தி

வணக்கம் அண்ணா.
விருப்பத் தலைப்பு:-
வெய்யோனே சீற்றமும் ஏனோ?…

அறுசீர் விருத்தம்

சீர் வரையறை..

விளம் விளம் காய்
விளம் விளம் காய்..

சூரியோய் கொட்டிநீ சூழ்நெருப்பைச்
சோகமும் தந்திட எண்ணியதேன்
பாரிடை மாந்தருன் பயிலரங்கா
பண்பினை விற்றதன் பாதகமா
மாரியள் செய்தநற் கொடையனைத்தும்
மண்மகள் வீட்டினுள் வைத்தனளே
வேரிடை ஓடியென் தேடுகிறாய்
வெம்பியே பூந்தளிர் வாடுதுபார்

காரிருள் ஆயினும் கனலகற்றாக்
காவியச் சாதனை போற்றுகின்றோம்
வாரியே தந்தெமை வறுத்தெடுக்க
வல்லமை தந்ததார் சூரியரே
பாரியைப் போலொரு எண்ணமிதோ
பார்த்திடப் பல்கதிர் பாய்ச்சுகின்றீர்
கூரிய வெம்மைகண் டோடுகின்றார்
கூட்டினுள் குஞ்சுகள் பாவமன்றோ!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading