சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_158

“பருவம்”
இளவேனில்
காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர்காலம்!

சூரியனை சுற்றி வரும்
பூமியின் சுழற்சி
சுழற்சியின்
சமதளம்
பூமி அச்சின்
சாய்வு
பருவ கால ஆய்வு!

பகலவன் வருகை
பகலுக்கு அழகு
பூக்களின் மலர்வு
பார்வைக்கு மகிழ்வு!

சூரியனின் ஒளிர்வு
கனிகளுக்கு
விருந்து
உடலுக்கு மருந்து!

தோலுக்கும்
தோள்பட்டைக்கும்
தோள் கொடுக்கும்
தோழனே
உன் வருகைக்காக காத்திருப்போம்
காவலனே
சேவகனே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
11.08.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading