திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கமலா ஜெயபாகன்

பருவம்
படைத்வன் பக்குவமாய் பயின்றான் பருவத்தை
பாரினில் பலவகை பலபல பருவங்கள்
கிடைத்ததை வைத்து கருத்துடன் மனிதன்
கண்ணியமாய் வாழ்ந்தான் கவலையின்றி நாளும்
இடையே புகுந்தது இதமாய் விஞ்ஞானம்
இயல்பு வாழ்வில் எவ்வளவோ மாற்றம்
கடைசியாக எதைக் கண்டோம் வாழ்வில்
கனமழையும் கட்டற்ற காட்டாற்று வெள்ளமுமே

மரங்கள் அழிந்தன மாடிவீடுகள் வந்தன
மனிதன் குரங்கானான் மானிடம் மரமானது
இரக்க மில்லை இங்கித மல்லை
எல்லார் வாழ்விலும் இன்னல் வந்தது
உரமும் இரசாயண மானதால் மண்ணில்
உயிர்கள் உதிர்ந்தன உயரற்ற உடலாய்
தரமற்ற யுற்பத்தியால் தவித்தன யுயிர்கள்
தளர்ந்து புவியும் தடம் புரழுது

எரிமலை வந்தது இடிந்தது இருப்பிடம்
எறிகணை வந்தது இனங்கள் அழிந்தது
வாகன நெரிசல் வளமண்டல நஞ்சு
வண்டி வண்டியாய் வளரும் நோய்கள்
பொல்லா நோயாய் புற்று நோயும்
சொல்லாமல் வந்து காவுது உயிரை
இப்படி இப்படி எத்தனை மாற்றம்
பருவம் மாறிப் பதைக்குது உலகம்/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading