பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:278
24/09/2024 செவ்வாய்
விடியுமா தேசம்?
————————
விடியுமா எங்கள் தேசம்?
வினவுது ஆஷா பாசம்!
படியுமா முரட்டுக் கேசம்?
படிந்திடின் விடியும் தேசம்!

அரசியலில் எம்மவர் வல்லவர்!
அண்டிப் பிழைப்பதில் மன்னவர்!
உரசல் பேச்சதில் உத்தமர்!
ஊரை ஏமாற்றிடக் கற்றவர்!

தீபாவளிக்கு விடியு மென்பர்!
தீந்தமிழும் சிறக்கு மென்பர்!
நாமாவளி சொல்வோ மென்பர்!
நாளைக்கே பெறுவோ மென்பர்!

உள்ளத்தில் தூய்மை இல்லை!
உணர்வதனில் தமிழும் இல்லை!
கள்ளத்தில் ஏதும் குறைவில்லை!
காவலுக்கு இங்கு எவருமில்லை!

பூனைக்கு யார்மணி கட்டுவது?
புதுவாழ்வு எப்போது எட்டுவது?
தானைக்கு யார்வழி காட்டுவது?
தரணிக்கு விடிவெவர் ஈட்டுவது?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading