மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கல்வி கற்றிட

Jeya Nadesan

கவிதை நேரம்-26.09.2024
கவி இலக்கம்-1921
கல்வி கற்றிட
————-
அறிவு எனும் அற்புத விளக்கு கல்வி
அறியாமையை அகற்றி அறிவை
கற்பதை திறம்படக் கற்று
அறிவுடன் வாழ முனைவோம்
கல் மனம் கரைய வாழ்ந்து
கழிப்புடன் என்றும் வாழ்வோம்
கற்பதை ஒழுங்காக கற்று
கற்பனை வாழ்வை தவிர்ப்போம்
நல்லதை நாளாந்தம் நினைத்து
நன்மைகளை செய்து மகிழ்வோம்
இல்லார்க்கு இரு கரம் கொடுத்து
இதயத்தால் இன்புற்று வளர்வோம்
பெற்ற அறிவை பகிர்ந்து அளித்து
மனதார கொடுத்து உயர்வோம்
கல்லான இதயங்களை களைந்து
கனிவுடனே வாழ்வை வளமாக்குவோம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading