நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பாலதேவகஜன்

வெற்றிப்பயணம்

கட்டளை பிறப்புக்காய்
காத்திருப்போம்.
கடும் பயிற்சகள் யாவிலும்
கலந்திருப்போம்.

இலக்கு என்ற ஒன்றை மட்டும்
இடைவிடாது நினைத்திருப்போம்
இரவு பகல் பார்க்காமல்
ஈழத்தாயை காத்து நின்றோம்.

வண்ணமாய் நீங்கள்
வாழ்ந்திடவே
திண்ணமாய் நாங்கள்
நின்றிருந்தோம்.

மண்ணையும் மக்களையும்
காத்திடவே எங்கள்
உடலையும் உயிரையும்
அர்ப்பணித்தோம்.

வேதனை கண்களில்
நிறைந்திருந்தும்
விடுதலை பெற்றிடவே
விழித்து நின்றோம்.

உலகமே பதறும்
பலத்துடனே இருந்தோம்
உன்னத வேள்விக்குள்
மூள்கியே கிடந்தோம்.

சமபலம் என்ற நிலையோடு
சமாதனத்துக்குள் நுழைந்தோம்
இது தந்திரோபாய நகர்வென்று
எண்ணிடாதே இருந்தோம்.

துரோகங்களால் நெருங்காதென்ற
நெஞ்சுரத்துடனே இருந்தோம்
துரோகங்களால் வீழும்
நிலைக்குள்ளே நின்றோம்.

வெற்றி பயணங்களையே
தொடர்ந்திட்ட எமக்கு
துரோகம் தந்த வலிகளால்
தளரும் நிலைக்கே சென்றோம்.

Nada Mohan
Author: Nada Mohan