” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அழகொளிரும் ஐப்பசி

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2041!!

ஐப்பசி அழகொளிரும்..!!

சக்கரமாய்ச் சுழலும் திங்கள்
சரித்திரமாய் பதியும் எங்கும்
ஐப்பசியும் அழகு சிந்தும்
அளவான மழையும் பொழியும்

இருள் வந்து விரைந்து கௌவும்
இளங்காற்று முதிர்ச்சி கொள்ளும்
பகல் நேரம் சுருங்கிச் செல்லும்
முன் பனியும் மூசியே பெய்யும்

எழுச்சிப் பெண்கள் நாளும் வரும்
ஏனைய சிறப்பு நாளும் வரும்
என் தந்தையின் நினைவு கொஞ்சும்
துயரினால் விழிகள் கெஞ்சும்

பழுத்து உதிரும் இலைகள் எழில்
பார்வை முழுதும் மஞ்சள் அதில்
பருவ கால மாற்றம் விழிகளில்
பாரினில் உணர்வீர் பலதும் இதில்..

Nada Mohan
Author: Nada Mohan