முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-38
17-10-2024

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே
உதிரத்தில் இனம்
புரியா வலியும் சோகமும்
உதிர்ந்து போன உறவுகளா?
உதிர்ந்து கொண்டிருக்கும்
உறவுகளா? நினைவுகளா?
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உன் புகழ் உலகறியும்!

இலைகள் உதிர்ந்தாலும்
மரங்கள் வாடுவது இல்லை
மீண்டும் புதிய இலை..
வாழ்வும் உணர்த்துகிறது
கணவனை பிரிந்து
வாடி வதங்கினாலும்
வலியற்று மீண்டு வா நீ
வாழ்வுண்டு உனக்கும்.

பச்சைக் கம்பளமாய்
பசும் சோலையாய்
பச்சையம் பலனளித்து
பலவாய் வாழ்ந்த நீ
வீழ்ந்து நீ சருகாவதும்
மிதந்து நீ எறும்புக்கு
ஒடமாவதும் கதையாகிடாமல்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading