ஒளியிலே தெரிவது 688

Selvi Nithianandan 14.11.2024

ஒளியிலே தெரிவது

மனதினில் வலியும் மறந்திடா வாழ்வும்
மகிழ்சியும் இல்லை மாறிய நிலையும்
மானிடம் பேச்சும் மழுங்கிய கல்லாம்
மனதை தொலைத்து மாறும் வழியும்

மாதமும் நகர அகமும் ரணமாய்
மாண்டவர் மீண்டும் வராத கனமாய்
விடியாத மண்ணில் ஏற்றும் விளக்காய்
விடி வெள்ளியாய் வானத்திலே பிரகாசமாய்

கார்த்திகை பூக்களும் கல்லறை ஒளியும்
காவிய வீரருக்கு காசினி மழையும்
காலத்தால் அழியாத கண்ணீர் கடப்பும்
கடந்திடும் பாதை கடினமே என்றும்

உறவுகள் வாழ பாதையை உருவாக்கி
உணவுடன் கல்வி மேலோங்க சீர்தூக்கி
உறக்கம் தொலைத்த உயிரை இணைவாக்கி
உதிரத்து உறவுதனை நிலைமாற வழிகாட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading