ஒளியிலே தெரிவது

கெங்கா ஸ்ரான்லி

ஒளியிலே தெரிவது உண்மைகள்
இருட்டிலே மறைவது பொய்மைகள்
வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மை
பளிங்குபோல் மினுங்கும் நீதி
சூரியன் வரவால் ஒளி வருகிறது
சூரியன் மறைந்தால் இருள்வருகிறது
பெளர்ணமி நிலவிலும் ஒளி இருக்கும்
பகலைப் போல அல்லவே
ஒளிஇன்றேல் உயிரினங்கள் இல்லை
உண்ண உணவும் இல்லை
வாழவழியும் இல்லை வர்ணங்கள் ஏதும் இல்லை
ஒளியினாலே இயற்கை பசுமையடைகிறது
ஒளிக்கதிர் வேகத்தில் அனிவியல்
முன்னேற்ற மடைகிறது
நடுகல்லுக்கு ஒளிச்சுடர்
ஏற்றி வணங்கும்பபோது
ஒளியிலே தெரிவது
தமதுயிரை ஈகை செய்த
மாவீர்ரின் மனமும் முகமும் தானே!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading