நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஒளியிலே தெரிவது

கெங்கா ஸ்ரான்லி

ஒளியிலே தெரிவது உண்மைகள்
இருட்டிலே மறைவது பொய்மைகள்
வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மை
பளிங்குபோல் மினுங்கும் நீதி
சூரியன் வரவால் ஒளி வருகிறது
சூரியன் மறைந்தால் இருள்வருகிறது
பெளர்ணமி நிலவிலும் ஒளி இருக்கும்
பகலைப் போல அல்லவே
ஒளிஇன்றேல் உயிரினங்கள் இல்லை
உண்ண உணவும் இல்லை
வாழவழியும் இல்லை வர்ணங்கள் ஏதும் இல்லை
ஒளியினாலே இயற்கை பசுமையடைகிறது
ஒளிக்கதிர் வேகத்தில் அனிவியல்
முன்னேற்ற மடைகிறது
நடுகல்லுக்கு ஒளிச்சுடர்
ஏற்றி வணங்கும்பபோது
ஒளியிலே தெரிவது
தமதுயிரை ஈகை செய்த
மாவீர்ரின் மனமும் முகமும் தானே!

Nada Mohan
Author: Nada Mohan