கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும்
சந்திப்பு _170
“உயிர்கொடை”
நமக்காக
நம் மொழிக்காக
தம் இன்னுயிர்களை ஈகம் செய்த
தியாக செம்மல்கள்

தாம் வாழவிட்டாலும் தம் இனம் வாழ
தம்மை அர்பணித்த
தியாக தீபங்கள்

சாவுக்கு அஞ்சாத
சத்திய வான்கள்
நித்திய சீலிகள்
புறமுதுகு காட்டாத

புறநானுற்று
வீரர்கள்

இளமைக் கால கனவுகளை
எல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
எறி கணைக்குள்
எரி மலையாய் வெடித்தவர்கள்

குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்திய
உயிர்கொடை உன்னதமானது
உலகம் வியக்குது
தமிழினம்
தவிக்குது
வீரம் தெறிக்குது!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
23.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading