சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“மாதவமே உந்தனை”

Jeya Nadesan

கவிதை நேரம்-28.11.2024
கவி இலக்கம்-1956
“மாதவமே உந்தனை”
——————-
இயற்கையிலே உறைந்திட்ட
எம் இதயத் தெய்வங்களே
எம் இனத்தின் உரிமைகளுக்காக
தமையீர்ந்த வீரப் புதல்களே
உயிரோடு உலோடு போராடி
இன்பம் ஆசை காதல் பாசம் உறவுகள்
தூக்கி எறிந்து விட்டு துறந்தவர்களே
காடு கடல் தாண்டி சுமையுடனே
ஆயுதங்களை தோழில் சுமந்து
சயனைட் குப்பி கழுத்தில் கட்டி
இடுக்கண் ஆயிரம் அடுக்காய் வரினும்
துணிவோடு போராடி உயிர் நீத்தார்களே
உங்கள் வரலாறு காடும் காந்தளும்
நீண்ட காவியங்கள் படைக்கும்
கல்லறைகள் பெயர் பதிக்கும்
வரலாறு படைத்து மறைந்த மகாத்மாக்களே
மாதவமே உங்கள் கனவுகள் நனவாகும்

Nada Mohan
Author: Nada Mohan