“மாதவமே உந்தனை”

Jeya Nadesan

கவிதை நேரம்-28.11.2024
கவி இலக்கம்-1956
“மாதவமே உந்தனை”
——————-
இயற்கையிலே உறைந்திட்ட
எம் இதயத் தெய்வங்களே
எம் இனத்தின் உரிமைகளுக்காக
தமையீர்ந்த வீரப் புதல்களே
உயிரோடு உலோடு போராடி
இன்பம் ஆசை காதல் பாசம் உறவுகள்
தூக்கி எறிந்து விட்டு துறந்தவர்களே
காடு கடல் தாண்டி சுமையுடனே
ஆயுதங்களை தோழில் சுமந்து
சயனைட் குப்பி கழுத்தில் கட்டி
இடுக்கண் ஆயிரம் அடுக்காய் வரினும்
துணிவோடு போராடி உயிர் நீத்தார்களே
உங்கள் வரலாறு காடும் காந்தளும்
நீண்ட காவியங்கள் படைக்கும்
கல்லறைகள் பெயர் பதிக்கும்
வரலாறு படைத்து மறைந்த மகாத்மாக்களே
மாதவமே உங்கள் கனவுகள் நனவாகும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading