நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாதவமே உந்தனை

கெங்கா ஸ்ரான்லி

மாதவமே உந்தனை
மனமார நினைத்தவண்ணம்
சாதனைகள் பலசெய்து
சரித்திரம் படைத்துவிட்டீரே
கோதண்ட ராமனைப்போல்
களத்தில் நின்றபடி
சாதரணசெயலாய் நினைத்து
சந்தடி இன்றியே சென்றுவிட்டீர்
குண்டுகள் போட்டுத் தகர்த்தாலும்
குனிந்து நிற்காது நிமிர்ந்து நின்று
வென்று களமாடியவரே
உந்தனை என்னவென்று வியந்து
போற்றுவோம்
தாய்மண் மீட்பிற்காய்
தம்முயிரை ஈந்த செல்வங்களே
சுயநலமில்லா தெய்வீக சேவை
எமைக்காக்கும்் அரண்களாக
மாறுபட்ட நிலையிலும்
மறுக்காது காத்தீரே
வீறுகொண்டு எழுந்த
வீரவேங்கைகளை
காலமெலாம் நினைத்து
அஞ்சலிப்போம் ஆராதிப்போம்
அனுதினமும் உம்நாம்ம்
மாதவமே உந்தனையே
ஆயுள் உள்ளவரை.!

Nada Mohan
Author: Nada Mohan