மாதவமே உந்தனை

கெங்கா ஸ்ரான்லி

மாதவமே உந்தனை
மனமார நினைத்தவண்ணம்
சாதனைகள் பலசெய்து
சரித்திரம் படைத்துவிட்டீரே
கோதண்ட ராமனைப்போல்
களத்தில் நின்றபடி
சாதரணசெயலாய் நினைத்து
சந்தடி இன்றியே சென்றுவிட்டீர்
குண்டுகள் போட்டுத் தகர்த்தாலும்
குனிந்து நிற்காது நிமிர்ந்து நின்று
வென்று களமாடியவரே
உந்தனை என்னவென்று வியந்து
போற்றுவோம்
தாய்மண் மீட்பிற்காய்
தம்முயிரை ஈந்த செல்வங்களே
சுயநலமில்லா தெய்வீக சேவை
எமைக்காக்கும்் அரண்களாக
மாறுபட்ட நிலையிலும்
மறுக்காது காத்தீரே
வீறுகொண்டு எழுந்த
வீரவேங்கைகளை
காலமெலாம் நினைத்து
அஞ்சலிப்போம் ஆராதிப்போம்
அனுதினமும் உம்நாம்ம்
மாதவமே உந்தனையே
ஆயுள் உள்ளவரை.!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading