எழுகைக்காய் ஓர் ஆண்டே..

சிவதர்சனி இராகவன்

எழுகைக்காய் ஓர் ஆண்டே..(2083)
விழுகையின் வீரியம் சட்டென அகல
எழுகையின் சீரியம் பட்டென விரிய
அழுகையின் காரியம் மெல்லென சரிய
நெகிழுதல் மட்டுமே நமக்கெனப் பதியும்

உயருதல் நமக்கெனப் பதியமிட
உணர்வொடு பாமுகக் கவிக்களம்
பயனொடு பலனிடப் பலமுக தரிசனம்
இயன்றிட உழைத்திட உலகே மகிழும்..

எழுதிட முழுமையும் எண்ணிய நிலைக்க
வழுவின்றி வலியின்றி வழுயுண்டு பாரீர்
தழுவிடும் கரங்களும் தகைமையொடு
உலவிடும் விண்மதி எழிலது உனதென..

வெற்றி நமதே வேளை இதுவே
கற்றிட ஊறும் அறிவும் இங்கே
பெற்றிடப் புதையல் இனிதே
கவியது களமிது கரமது பதியுமே..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading