” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எழுகைக்காய் ஓர் ஆண்டே..

சிவதர்சனி இராகவன்

எழுகைக்காய் ஓர் ஆண்டே..(2083)
விழுகையின் வீரியம் சட்டென அகல
எழுகையின் சீரியம் பட்டென விரிய
அழுகையின் காரியம் மெல்லென சரிய
நெகிழுதல் மட்டுமே நமக்கெனப் பதியும்

உயருதல் நமக்கெனப் பதியமிட
உணர்வொடு பாமுகக் கவிக்களம்
பயனொடு பலனிடப் பலமுக தரிசனம்
இயன்றிட உழைத்திட உலகே மகிழும்..

எழுதிட முழுமையும் எண்ணிய நிலைக்க
வழுவின்றி வலியின்றி வழுயுண்டு பாரீர்
தழுவிடும் கரங்களும் தகைமையொடு
உலவிடும் விண்மதி எழிலது உனதென..

வெற்றி நமதே வேளை இதுவே
கற்றிட ஊறும் அறிவும் இங்கே
பெற்றிடப் புதையல் இனிதே
கவியது களமிது கரமது பதியுமே..

Nada Mohan
Author: Nada Mohan