” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்

சிவருபன் சர்வேஸ்வரி

புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்

புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //

கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_

நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_

வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //

பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //

சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //

தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //

பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //

புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //

கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //

முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //

எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan