புலத்திலே பொங்கல்

Selvi Nithianandan (697)

புலத்திலே பொங்கல்

புலத்திலே பொங்கல்
புதுமை நிலையே
நிலத்திலே மறந்து
நிஜமான பொங்கல்

விடியலேத் தேடியே
விரைந்திடும் வேளை
மறைந்திடும் நினைவு
கரைந்திடும் பொழுது

அட்டிலில் பொங்கல்
அடிமனசு வெம்பல்
ஆயிரம் மலர்வு
அகமும் அடங்கல்

காலையில் வேலை
கதிரவன் இல்லை
களிப்பினை மறந்து
கழித்திடும் நாளாய்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading