மொழியும் கவியும்

வஜிதா முஹம்மட்

மொழியும் கவியும்

வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்

வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்

தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்

தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்

எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்

எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்

நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே

நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே

பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்

பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்

மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை

வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading