“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.2.25
ஆக்கம் 179
நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால்

காலத்தின் கோலம்
வேண்டும் வேண்டாத
பிறப்பும் இறப்பும் வந்திடுமே

பூக்கள் பூப்பதும்
பூத்தது உதிர்வதும்
இளமை முதுமை
இயற்கையின் வரப்பிரசாதமாய்த்
தந்திடுமே

அடியும் முடியும் தேடி
அலையும் மானிடர்
மனதில் நிலையற்ற
வாழ்வின் எடுத்துக் காட்டாகப் பதிந்திடுமே

கனத்த நினைவுகளில்
காணும் கனவுகள் நிறைவேறாது கடந்து
விட்ட காலம் சிதைந்திடுமே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் முயற்சி
எடுக்காத முடுக்கு
மேல் நோக்கி செல்ல
விடாது கீழ் நோக்கிச் சென்று உயர்வு இல்லாது அற்புத
வாழ்வு தொலைந்திடுமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan