நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நகுலா சிவநாதன்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நினைப்பதற்கு எண்ணம் மனதிலே வகுத்து
தினையது முளைப்பதாய் சிந்தனை முளைத்து
பனைபோலப் பெருகி பக்கவமாய் வளர்ந்து
மனைபோலக் கட்டுமே மாண்புமிகு சிந்தனை

சிந்தையின் நினைவும் சிதறும் எண்ணங்களும்
விந்தையாய் உலகில் வினைத்திறன் விளைவே!
சுந்தர வடிவ சுடர்விடும் எண்ணமே
மந்திர வடிவ மாண்புறு செயலே!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…..
மனதிலே மகிழ்வு மாற்றமாய் உருவாகும்
கனவிலே காரியம் காட்சியாய் பெருகும்
குதூகல மெங்கும் பூத்து விரியும்
கூடவே வரவுகளும் கொட்டி கிடக்கும்

நகுலா சிவநாதன் 1797

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading