சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_178

“பங்கு நீ”
பங்கு நீயில் பிறந்தாய்
பங்கு தாரராய் வந்தாய்
பண்பு உள்ள உத்தமனே
பாசமும் நேசமும் உன்னுள்!

உனக்கென நானும்
எனக்கென நீயும்
உறவாடி மகிழ்ந்தோம்
உரிமையுடன் கைபிடித்தோம்!

இனணயாய் துணையாய்
துணை நின்றாய்
இணைபிரியா நண்பனே
தோள் கொடுக்கும் தோழனே
தூணாக எமை தாங்குகின்றாய்!

நீ பாதி நான் பாதி
பாதி அப்பிள் சாப்பிட நீ வேணும்
மாதுளைக்கு முத்தெடுக்க நான் வேணும் உன்னருகில்
நானில்லையென்றால் நீ எது!

சிலநேரம் சண்டை
முழு நேரம் காதல்
பல மணி நேரம் பேசி
நேரத்தை மறந்து வாழ்வோம்!

மாறாத மனதோடு
மறக்காத நினைவோடு மறையாத காதலனே நீ!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
08.02.25

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading