மனோகரி ஜெகதீஸ்வரன்

பங்கு நீ

வந்தாய் மனை எந்தன் பாகமாய்
தந்தாய் தந்தையெனும் பதம் வேகமாய்
நொந்தாய் எமக்காய் தினம்தினம்
பந்தினைப் போன்றே சுழன்று உழன்று

பொங்கி மங்களம் பூமெத்தையிட நீயே காரணி
பொசுங்கித் தீதுகள் மாய்ந்திட நீயே காரணி
தங்கும் வளத்துக்கும் தாரம் நீயே காரணி
மங்கா சுகத்துக்கும் நீயே நிவாரணி
தந்தாய் நீயெனக்குத்
தலைமையணி
தலைதாழ்ந்து நிற்கின்றது வசவுமொழி
எந்நாளும் தருவேன் இசைவுமொழி
நீயே எந்தன் வாழ்விணொளி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading