“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நம்பிக்கை

இயற்கை இறையுடன்
இல்லறம் இணைவாய்
நம்பிக்கை கொள்ளல்
சாலவும் சிறப்பு

பெற்றவர் பிள்ளைகள்
தொடர்திடும் நம்பிக்கை
மற்றவர் இணைவும்
மாண்புறும் நாளும்

விடியலின் அத்தியாயம்
முடியுமே நம்பிக்கை
விழுந்தும் எழுந்தாலும்
விரட்டிவிடு துணிவாய்

நம்பிக்கை வாழ்வு
நாளை சரிதம்
தும்பிக்கையான் துணை
துலங்கிடும் இறையே

Nada Mohan
Author: Nada Mohan