தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நிழலாடும் நினைவுகள்

நேவிஸ் பிலிப் கவி இல(401) 27/02/25

சின்னஞ் சிறுவயதினிலே
சித்திரமாய் என் நினைவில்
நித்தமும் நிழலாடும்
எனதூரில் என் வாழ்வு

அதிகாலை எழுகை
ஆலய தொழுகை
வாடிக்கைத் தொடராய்
நாளாந்த வாழ்க்கை

இன்பமாய் கழிந்த
இளமை வாழ்வில்
கவலைஎன்று ஏதுமில்லை
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தோம்

கிராமத்து வனப்பினிலே
ஓடியாடி விளையாடி
கடல் மண்ணில் கால் நனைத்து
களிப்போடு வாழ்ந்திருந்தோம்

கண்டிப்பு கரிசனையாய்
கண்மணி போல் காத்த முன்னோர்
நல்லறிவு புகட்டி எம்மை
நல்வழியில் நடத்தினரே

கண்ணி அன்று மடியில் இல்லை
அலைபேசி கையில் இல்லை
தொலைக்காட்சி பெட்டி இல்லை
விளையாட்டில் வலிமை பெற்றோம்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading