மனோகரி ஜெகதீஸ்வரன்

நம்பிக்கை

அழுத்தமான உள்ளுணர்வே நம்பிக்கை
கழுத்தளவு துயரையும்
கடக்கவைப்பது நம்பிக்கை

அனைவரிடமும் இருக்கின்றது ஏதோவொரு நம்பிக்கை
அதில்சிலதைச் சொல்கின்றேன் சிந்திக்க

தொழுதால் கிட்டுமென்ற
நம்பிக்கையே
தொழவைக்கிறது பக்தனை
அழுதால் கிடைக்குமென்ற
நம்பிக்கையே
அழவைக்கின்றது குழந்தையை

விதைத்தால் எழுமென்ற நம்பிக்கையே
வீச வைக்கிறது உழவனை

பசிக்குணவு தருவானென்ற நம்பிக்கையே
பதறாதிருக்கச் செய்கிறது உலகை
பழுத்தால் வீழுமென்ற நம்பிக்கையே பரபரப்பின்றிக் காத்திருக்கச்செய்கின்றது பயனாளிகளை

உதிக்கின்ற சூரியன் சிதறானென்ற நம்பிக்கையே
விடியலைக் காணவைக்கிறது எம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading