ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-63

25-02-2025

நம்பிக்கை

கரங்கள் பல சேர்ந்தும்
காவலர்கள் நிரை வந்தும்
வையகமே உனை தூற்றினாலும்
வைத்துவிடு உன்னில் நம்பிக்கை

கடவுளில் நம்பிக்கை
கன உயர் சக்தியென
தன்னில் நம்பிக்கை
திறமையும், திறனுமென

இருள் சூழ்ந்தாலும்
இதயம் தளர்ந்தாலும்
நம்மை உணர்த்த
நம்பிக்கை போதும்

தோல்வியுற்ற போது
வெற்றி தரும் நம்பிக்கை
முயற்சியெனும் இலக்கை
நம்பிக்கை நனவாக்கும்.

விழலுக்கிறைத்த நீரென
வீணாக்கி விடாதே
முயற்சியெனும் விதையிட்டு
முளைக்க வைத்திடு

பயிற்சியெனும் உரமிட்டு
பயிர் செழிப்பது போல
தன்னம்பிக்கை பயரிங்கே
நம்பிக்கை போல செழிப்புறும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading