ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

” இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “

“ இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.03.2025

சிந்தனைப்பட்டறை செம்மொழிக்காவலர்
நாவலர் மரபில்வந்த ஞானக்களஞ்சியர்
மட்டுவில் மண்ணில் உதித்தமகான்
இலக்கியவழி இருநாடகமென தந்த
உயர்தர பாடத்திட்டத்தின் ஆசான்
ஆசான்களுக்கெல்லாம் ஆசான் பேராசான் !

ஆசான் ஆக்கிய நூல்களெல்லாம்
அருந்தமிழுக்கு விருந்தாகி
எழுத்திலே புதுமை நடையிலே காத்திரமாய்
சொல்லுக்குப் பொருளுரைப்பார் கச்சிதமாய்
வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தமிழுக்காய் !

அள்ளஅள்ளக் குறையாத அறிவுச்சுரங்கம்
தெள்ளுதமிழ் நீரோடை செந்தமிழின் பாவலன்
அரைநூற்றாண்டுகள் தமிழோடு பயணித்து
பங்குனித்திங்கள் பதின்மூன்றிலே மறைந்தாரே
பண்டிதமணி ஐயாவிற்கு யாழ்வளாகமும்
பண்போடு கலாநிதிப் பட்டத்தினையும் வழங்கி
பண்பாடு காத்து நின்றதே !

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading