ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்—-
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்

வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து செலுத்தும் படகிலே
நிறைந்து நிமிரும் வியர்வையே
நித்தம் நடத்தும் உடல்சமர்

வரவு செலவுப் பயணியாய்
வருமானம் ஈட்டும் தேனீயாய்
உழைப்பின் உரமே உன்னதம்
உலக விழிப்பின் உயர்தினம்

மேதினம் மேதினி ஆள்கையில்
மேன்படும் வர்க்கமே விழித்தெழு
யாழினில் குரலிசை மீட்டிடும்
நரம்புகள் புடைக்கும் நம்பிக்கை
உழைப்பே உயர்வின் முதற்படி
உலகை ஆளும் திறன்வழி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading