ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

அன்னை

ராணி சம்பந்தர்

பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த இருப்பிடம் அன்னை

பாதந்தொட்டு வணங்கும் தாயே!
பத்து மாதக் கரு பிறந்து வளர்ந்து
தவழ்ந்து நடந்து பள்ளி சென்ற
பருவம் பூத்துத் துள்ளிய மனதில்

மணவறையில் கொட்டிய மேளம்
கட்டிய தாலியில் முட்டிய சொந்தம்
அதில் தானும் பிள்ளை பெற்ற
அன்னை பதவி உயர விருந்து
படைத்த உன் தாய்மடிக் கொழுந்து

பறித்து நட்ட மகள் மருமகள் எனப்
பல வடிவங்களில் ஒளியூட்டித்
தொடரும் அன்னையே வாழ்க .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading