திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி
பள்ளிப் பருவத்திலே அன்று
துள்ளித்திரிந்ததொரு காலம்
அள்ளிப்பருகிய அறிவின் துளி
கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி

உள்ளக் கமலத்தில் உறவின் மொழி
தெள்ளத்தெளிவாய் உரைத்தநெறி
கொள்ளை அழகினை கொடுத்த திலை
எண்ணித் தெளிந்திட செவி நுகர்ந்த நொடி

சின்னக் குழந்தைகள் சிறு கைகளினால்
செல்லத் தமிழினை சீர் தொடுத்து
பண்ணும் பாவுமாய் பின்னி மெல்ல
நிதம் உரத்தொரு உவகை களித்த படி

நாளைய வாழ்வுக்கு விதைத்த விதை
நித்தமும் நிதமுமாய் செப்பனிட்டே
கல்வியில் உயர்ந்தோர் களை பிடுங்கி
எமை கனிவுற நிலை பெற வளர்த்த செயல்

எண்ணிலடங்கா நினைவுகளை-மனம்
ஏந்திக்களித்திடும் பள்ளிப்பருவமது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading