முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161

“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..

கருவாகி உருவாகக்
காரணி இவரே தான்
கடமை கண்ணியம்
கற்றதும் இவரிடத்தேதான்..

வலுவான கரமிரண்டு
அரவணைப்போடு அள்ளியது
உரமூட்டி வளர்த்தது
உணர்விலே உறைத்தது..

பாசத்தைப் பாடமாக்கி
பக்குவத்தைப் பூடகமாக்கி
கூட்டுக்குள் குருவிகளை
காத்த ஆண்தெய்வமன்றோ..

தோளிலே ஏற்றி வைத்து
தோழமையாய் அணைத்திடும்
ஏழ்மையற்ற மாமனிதம்
தாயுமான பராபரமே..
சிவதர்சனி இராகவன்
5/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading