நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தாயுமானவர்

நகுலா சிவநாதன்
தாயுமானவர்

தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம் ஆனவர்

சின்ன வயதில் எமை வளர்த்தவர்
சிங்காரக் கதை சொல்லி வளர்த்தவர்
அம்மா இல்லாவிட்டாலும்……
அரவணைத்து வளர்த்தவர்

செம்மை வாழ்வில் செழிக்க வைத்தவரே
உண்மை சொல்லி வாழ்ந்த உத்தமர்
தன்னம்பிக்கை தந்த எங்கள் அப்பா
தளராது அப்பா உந்தன் அன்பு

நகுலா சிவநாதன் 1810

Nada Mohan
Author: Nada Mohan